search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு போலீசார்"

    சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு போலீசாரின் ‘வாக்கி-டாக்கி’ மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    அடையாறு:

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ‘ஈ’ மற்றும் ‘சி’ பிரிவு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 11-ந்தேதி ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ‘ஈ’ பிரிவு போலீசார், பணி முடிந்து தாங்கள் பயன்படுத்திய பாதுகாப்புக்கான கருவிகளை ஒப்படைத்து விட்டு சென்றனர். இதையடுத்து ‘சி’ பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியை ஏற்றனர்.

    அப்போது ‘ஈ’ பிரிவு போலீசார் ஒப்படைத்த பாதுகாப்பு கருவிகளில் ஒரு ‘வாக்கி-டாக்கி’ மாயமாகி இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில்வாகனன், இதுபற்றி மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மாயமான ‘வாக்கி-டாக்கி’ டி.ஜி.பி. அலுவலகத்திலேயே தொலைந்து போனதா? அல்லது யாராவது அதை திருடிச்சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ‘வாக்கி-டாக்கி’யை கடைசியாக பயன் படுத்திய போலீசாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
    ×